
தமிழும், தெலுங்கு ம் கிட்டத்தட்ட தன்னை தொங்கலில் விட்டு விட்டதால் அடுத்து கன்னடத்திற்குக் குறி வைத்துள்ளாராம் நயனதாரா .
சிம்புவுடன் காதல் பின்னர் கலாட்டா. சிறிது கால கேப்புக்குப் பின்னர் பிரபுதேவாவுடன் காதல், தொடரும் கலாட்டா என போய்க் கொண்டிருக்கிறார் நயன்தாரா. இதன் விளைவு தமிழ் மார்க்கெட் அவுட். தெலுங்கு மார்க்கெட் அம்போ.
கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கில் நயன்தாராவின் காலம் முடிந்து விட்டது என்கிறார்கள். பிரபு தேவாவுடன் அவருக்கு ரகசியமாக கல்யாணமும் ஆகி விட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து அவரைத் தேடிப் போகவிருந்தவர்களும் கூட ஜகா வாங்கி தமன்னாவின் வீட்டுப் பக்கம் கார்களைத் திருப்பி வருகின்றனராம்.
தமிழிலும், தெலுங்கிலும் பிசியாக இருந்தபோது தாய்மொழி களமான மலையாளத்தை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை நயன்தாரா. இதனால் மீண்டும அங்கு திரும்ப அவருக்கு பெரிய அளவில் இஷ்டமில்லை. சம்பளமும் அங்கு ரொம்பக் குறைச்சல். இதனால் கன்னடத்துப் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளாராம் நயனதாரா.
முதல் முதலாக கன்னடத்தில் நடிக்கப் போவதால் அங்கு தனக்கு நல்ல அறிமுகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதல் வேலையாக பத்திரிகைகப் பேட்டிகளுக்கு நிறைய நேரம் ஒதுக்குகிறாராம். தனக்குத் தெரிந்தவர்களுக்கு தானே போன் போட்டு சென்னாகிதீரா சாரே (நல்லாருக்கீங்களா ஐய்யா)என்று மலையாளமும், கன்னடமும் கலந்து கட்டி நலம் விசாரிக்கிறாராம்.
இந்த அப்ரோச் ரொம்ப நல்லாருக்கே என்று கன்டன மீடியாக்களும் குஷியாகியுள்ளனவாம்.
நயன்தாராவுக்கு மொழிப் பிரச்சினையெல்லாம் பெரிதே இல்லையாம். ஜமாய்க்கிறாராம். பிரபுதேவாவுக்குத்தான் கன்னடம் தாய்மொழியாச்சே, பிறகு எப்படி வரும்!
No comments:
Post a Comment